கோவில்பட்டி, டிச. 28: கோவில்பட்டி அருகே கடம்பூரில் திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடியும், முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான கடம்பூர் எம்.ஆர்.ஜனார்த்தனன் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது இறுதி சடங்கு நேற்று கடம்பூரில் நடந்தது. அவரது மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். கடம்பூரில் வைக்கப்பட்டிருந்த கடம்பூர் ஜனார்தனன் உடலுக்கு, அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமைப்பு செயலாளர் கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.பி.க்கள் அப்பாத்துரை, சிவப்பிரகாசம், முன்னாள் எம்எல்ஏ மோகன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரைபாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, கருப்பசாமி, ஞானகுருசாமி, பால்ராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராமச்சந்திரன், யூனியன் சேர்மன்கள் தூத்துக்குடி சத்யா, கோவில்பட்டி கஸ்தூரி, துணைசேர்மன் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர்கள் தங்கமாரியம்மாள், சந்திரசேகர், முன்னாள் யூனியன் துணைச்சேர்மன் சுப்புராஜ், நகரச் செயலாளர்கள் கோவில்பட்டி விஜயபாண்டியன், கயத்தார் கப்பல் ராமசாமி, கடம்பூர் வாசு, நகர மாணவரணி செயலாளர் விநாயகாமுருகன், பால்ராஜ், முத்துராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி, தமாகா மாவட்ட தலைவர் கதிர்வேல், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் அய்யலுசாமி, தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரன், பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு, கடம்பூர் நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஜெயராஜ், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ்பாண்டியன், வேல்மணி, ஆபிரகாம் அய்யாதுரை, போடுசாமி, அருணாசலசாமி, சுதா உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு காலை 11.30 மணிக்கு கடம்பூரில் அவரது தோட்டத்தில் மனைவியின் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே, கடம்பூர் ஜனார்த்தனனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.